அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘குற்றம் 23’. அதனைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் அறிவழகன் ஈடுபட்டு வந்தார்.

தற்போது அந்தக் கதையில் அருண் விஜய் நடிக்கச் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தை ‘கொரில்லா’ படத்தைத் தயாரித்த ஆல் இன் ஆல் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக ராஜசேகர், இசையமைப்பாளராக சாம் சி.எஸ்., கலை இயக்குநராக சக்தி வெங்கட்ராஜ் மற்றும் எடிட்டராக சாபு ஜோசப் ஆகியோர் பணிபுரியவுள்ளனர். இம்மாதம் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, 2020-ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.