செக்கச்சிவந்த வானம்’ படத்தைத் தொடர்ந்து, ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்குவதில் ஆர்வமாகியுள்ளார் மணிரத்னம். இந்த படத்திற்காக கார்த்தி, விக்ரம், அமிதாப் பச்சன், ’ஜெயம்’ ரவி, ஐஸ்வர்யா ராய், மோகன் பாபு, கீர்த்தி சுரேஷ் , அனுஸ்கா , அருண் விஜய் ஆகியோரை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

ஐஸ்வர்யா ராய் மற்றும் விக்ரம் இதை உறுதி செய்துள்ளனர் .

இந்நிலையில் அருண்விஜய்யிடம் கால்சீட் கேட்டு,மணிரத்னம் தரப்பினர் அனுகியுள்ளனர். ஆனால் “ஒப்புக் கொண்ட படங்களில் நடிக்கவே நேரம் போதாமல் இருக்கும்போது, புதிதாக படங்களை ஒப்புக் கொள்ள முடியாது” என அருண் விஜய் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.