டெல்லி:

லைநகர் டெல்லியில் அமோக வெற்றியை கைப்பற்றியுள்ள ஆம்ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இதையடுத்து வரும் 16ந்தேதி டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் 3வது முறையாக முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ஏற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

டெல்லியில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் 70 தொகுதிகளில் 62 தொகுதிகளை கைப்பற்றி அமோக சாதனை படைத்துள்ளது ஆம்ஆத்மி கட்சி. இதைத்தொடர்ந்து, இன்று காலை அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் ஆம்ஆத்மி எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் சட்டமன்ற கட்சித்தலைவராக அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, வரும் 16ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான புதிய அமைச்சரவை பதவி ஏற்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.