மாநாடு படத்தை தொடர்ந்து இருமுகன் பட இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக தற்போது தகவல்கள் கசிந்துள்ளன.

இந்தப் படத்தில் சிம்புவுக்கு வில்லனாக ஆர்யா நடிக்க இருப்பதாகவும், ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மாநாடு படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை அடுத்து மிஷ்கின் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக கூறப்பட்டது .ஆனால் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.