கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் மூடப்பட்டு இன்றுடன் 100 நாட்கள் மேல் ஆகின்றன.
திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பதால், படங்களை வெளியிட முடியாமல் தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்தில் இருக்கிறார்கள்.
இதனால், தயாராகி இருக்கும் படங்கள் பலவும் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘டெடி’ திரைப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்கான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும் பட்சத்தில், ‘டெடி’ படமும் ஓடிடி தளத்தில் வெளியாக வாய்ப்புள்ளது.