விம்பிள்டன் சாம்பியனாக ஜோகோவிக் வென்ற போதிலும் ரோஜர் ஃபெடரர் தோல்வியால் பலர் அதை கொண்டாடவில்லை.

ஜோகோவிக்

நடந்து முடிந்த விம்பிள்டன் போட்டி இறுதிச்  சுற்றில் ரோஜர் ஃபெடரர் மற்றும் நோவோக் ஜோகோவிக் ஆகியோர் மோதினர். இதில் ரோஜர் ஃபெடரருக்கு உலகெங்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஆகையால் ஃபெடரர் வெற்றி பெறுவார் என்னும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

ரோஜர் ஃபெடரர்

 

இந்த போட்டியின் வர்ணனையாளர்களும் ஏதேனும் மாய மந்திரம் நடந்தால்  மட்டுமே ஜோகோவிக் வெல்லுவார் எனக் கூறி வந்தனர். இந்நிலையில் அனைவரையும் எதிர்பார்ப்புக்களும் பொய்யானது. வர்ணனையாளர்கள் கூறியது போன்ற மாய மந்திரம் நிகழ்ந்து ஜோகோவிக் வென்றார்.

 

இதற்காக ஜோகோவிக்கை கொண்டாடிய ரசிகர்கள் மிகவும் குறைவானவர்களே ஆவார்கள். அனைவரும் ரோஜர் ஃபெடரர் அதிர்ச்சி தோல்வி அடைந்தது குறித்து வருத்தம் தெரிவித்த வண்ணமே இருந்தனர். உலகின் முன்னணி விளையாட்டு வீரர் என கருதப்பட்ட ஃபெடரரின் தோல்வி அவர்களை அந்த அளவுக்கு பாதித்துள்ளது.