மிழ் திரைப்பட த்யாரிப்பாளர்கள் நட்ப்பு சங்க தலைவர் பாரதிராஜா இன்று வெளி யிட் டுள்ள அறிக்கையில் கூறி இருப்ப தாவது:
தமிழக முதல்வருக்கும், அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோருக்கு நன்றிகள். வணக்கம்! இந்த காலகட்டத்தில் எங்கள் சங்கங்கள் சுய நிர்வாகமின்றி கட்ட மைப்பு, உள்தேவைக்கான சுய முடிவுகள் எடுக்க முடியாமல் போனா லும்,
எங்களின் தேவைகளை அறிந்துகொள்ள உங்களிடம் வந்து கலந்துகொள்ள பெரும் உதவியாக இருந்தீர்கள். எப்போதெல்லாம் நாங்கள் சந்திக்கமுடியுமா எனக் கேட்ட போதெல்லாம் திரையுலகிற்காய் உங்கள் அனுமதிக் கதவுகளும், பிரச்சனைகளை புரிந்துகொள்ள செவிகளும் காலந் தாழ்த்தியதே இல்லை. அதற்கு எங்கள் நன்றிகள்.
எங்கள் திரையுலகம் இருண்டுவிட்டதோ… திரும்ப தழைக்க அடுத்த ஆண்டு ஆகிவிடு மோ? பட்டினியால் பல குடும்பங்கள் வதங்கிவிடுமோ என்ற பதட்டமும், முடிவு தெரியா குழப்பமும் மேலிடத் தான், கடந்த 14 ஆம் தேதி தமிழ்த் திரைப் பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக சின்னத் திரை படப்பிடிப்பு போலவாவது நடத்த அனுமதியுங்கள் எனக் கோரிக்கை வைத்தோம்.
இப்போதும், கொரோனாவின் பரவல் சூழலில் தமிழக அரசு நினைத்திருந்தால் நாங்கள் படப்பிடிப்பிற்குச் செல்வதை முடக்கியே வைத்திருந்திருக்கலாம். ஆனால், அரசு கொடுத்த வழிமுறை களைப் பின்பற்றி முழுமையாக செயல் படுவோம் என்ற எங்களின் உறுதிமொழி யையும். பட்டினியால் வாடுவோர்க ளையும் கருத்திற்கொண்டு படப்பிடிப் பிற்கு அனுமதியளித்ததை நன்றியோடு பார்க்கிறோம். அந்த கனிவைக் காட்டிய தமிழக முதல்வ ராகிய (எடப்பாடி பழனிசாமி )தங்களுக்கும், எங்கள் பிரச்சனைகளைக் கூர்ந்து கேட்டுக்கொள் ளும் அமைச்சர் கடம்பூர் ராஜூக்கும் நன்றிகள் பல.


பணம் போட்ட தயாரிப்பாளர்கள், பண உதவி செய்தவர்கள் என எல்லோரும் இதனால் இழப்பிலிருந்து மீள முடியும். ஏற்கெனவே பிற்சேர்க்கைப் பணிகளுக்கு அனுமதி கொடுத்ததிலிருந்தே எங்களின் மீது நீங்கள் காட்டிய அக்கறையைப் புரிந்துகொண்டோம்.
தற்போது படப்பிடிப்புத் தளங்களுக்கும் செல்ல அனுமதி தந்துள்ளீர்கள். இன்னும் சில வரைமுறைகளோடு எங்கள் திரைய ரங்குகளையும் இயங்க ஆவண செய்வீர் கள் எனக் காத்திருக்கிறோம். முன்னமே நாங்கள் வைத்திருக்கும் கோரிக்கை களையும் பரிசீலிக்கக் கேட்டுக் கொள்வ தோடு, திரையரங்க வரிவிகிதங்களையும் குறைத்து சினிமா வாழ வழிவகை செய் தால் அத்தனை ஆயிரம் கலைக் குடும்பங் களும் உங்களுக்கு நன்றிக் கடன்பட்டவர் களாவோம்.
திரையுலகம் மறக்க முடியாத ஒரு முதல்வரைப் பெற்றதென உயர்த்திப் பிடிப்போம். பிற்சேர்க்கை பணி செய்தாலும், படப்பிடிப்புத் தளம் சென்றா லும், நாங்கள் உண்மையாகவே மீளும் நாள் திரையரங்கங்கள் திறக்கும் நாள்தான்.
அதன் மூலமே எம் தயாரிப்பாளர்கள் முடக்கிய பணத்தைப் பெற முடியும். மக்களின் நலத்தின் மீதும் அக்கறை கொண்டுள்ள ஒரு சமூகப் பிரக்ஞைதா னென்றாலும் வழி முறைகள் வகுத்துக் கொடுத்து திறந்துவிட மாட்டீர்களா என நப்பாசைப் டுகிறேன்.
ஆவண செய்ய அத்தனை சினிமா குடும் பங்களின் சார்பாகக் கேட்டுக் கொள்கி றேன். செய்வீர்களெனவே காத்திருக்கி றோம்.
இவ்வாறு பாரதிராஜா கூறி உள்ளார்.