வுரா

மேற்கு வங்க மாநிலம் அவுராவில் திருணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர் சுட்டுக்  கொல்லப்பட்டதால் கடும் வன்முறை வெடித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம் அவுராவில் தர்மேந்திர சிங் என்பவர் வசித்து வந்தார்.  இவர் திருணாமுல் காங்கிரஸ் கட்சியின் தொண்டர் ஆவார்.   இவர் நேற்று பகல் ஷாலிமார் 3 ஆம் கேட் அருகே சென்றுக் கொண்டிருந்துள்ளார்.   அப்போது பைக்குகளில் வந்த மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர்.

நகரில் முக்கியமான இடத்தில் பரபரப்பான நேரத்தில் பட்டப்பகலில் பைக்குகளில் வந்தவர்கள் இவரை 5 ரவுண்டுகள் சுட்டு படுகொலை செய்து தப்பி உள்ளனர்.  இது மேற்கு வங்க மாநிலத்தில் கடும் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.  அந்தப் பகுதியில் கடும் வன்முறை வெடித்துள்ளது.,

அவுரா பகுதியில் பல இரு சக்கர வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளன.  அங்குள்ள ஏராளமான கடைகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.  பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளது.  நான்கு பேருந்துகள் வன்முறையாளர்களால் எரிக்கப்பட்டுள்ளன.  அப்பகுதியில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.