டெல்லி: நாடு முழுவதும் சிறப்பு ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ரயில், விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. ஒன்றரை மாதங்களுக்கு பிறகு, மே 12 முதல்,  டெல்லியில் இருந்து சென்னை, பெங்களூரு, அகமதாபாத் உள்ளிட்ட 15 முக்கிய நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந் நிலையில், நாடு முழுவதும் சிறப்பு ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டு உள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:  நாடு முழுவதும் மேலும் பல சிறப்பு ரயில்களை இயக்க மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக, தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே வரும் 15ம் தேதி வரை ரத்து செய்து அறிவித்தது,  குறிப்பிடத்தக்கது.