சென்னை

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது பிறப்பிக்கப்பட்டிருந்த பிடி வாரண்ட் ரத்தை தொடர்ந்து விஜயகாந்த் சென்னை வருகிறார்.

சிகிச்சையில் விஜயகாந்த்

கடந்த 2013 ஆம் வருடம் செய்தியாளர் ஒருவரை சென்னை விமான நிலையத்தில் தாக்கியதாக விஜயகாந்த் மீது வழக்கு தொடரப்பட்டது.   அந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகததால்  ஆலந்தூர் நீதிமன்றம் அவர் மீது பிடிவாரண்ட் பிறப்பித்தது.   தற்போது சிகிச்சைக்காக விஜயகாந்த் சிங்கப்பூர் சென்றுள்ளார்.   உடல்நிலை காரணமாக சரியாக பேச இயலாமல் உள்ள விஜயகாந்த் மேல் சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

இது குறித்து விஜயகாந்த் தரப்பில் நீதி மன்றத்தில் மனு ஒன்று தரப்பட்டது.  அதில் பிடி வாரண்டை ரத்து செய்யுமாறு கோரிக்கை விடப்பட்டிருந்தது.   கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம்  விஜயகாந்த் மீதான பிடி வாரண்டை ரத்து செய்துள்ளது.    தற்போது சிங்கப்பூரில் உள்ள விஜயகாந்த் ஏர் இந்தியா விமானம் மூலம் நாளை காலை 10 மணிக்கு சென்னை வருவதாக செய்திகள் வந்துள்ளன.