அலமாட்டி: ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில், இரண்டாவது முறையாக தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை சரிதா.

தற்போது கஜகஸ்தான் நாட்டில் நடைபெற்று வருகிறது ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி. இதில், 59 கிலோ எடைப்பிரிவில், முதல் சுற்றில், மங்கோலியாவின் ஷூவ்தோர் பாதர்ஜாவை எதிர்கொண்டார். ஆனால், அதில் தோற்றாலும், இரண்டாவது சுற்றில், கஜகஸ்தானின் டயானாவை வெற்றிகொண்டு அரையிறுதிக்குள் நுழைந்தார்.

இதில், கிர்கிஸ்தானின் அனார்குலோவாவை வென்று, இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். இறுதிப் போட்டியில், தன்னை முதல் சுற்றில் தோற்கடித்த மங்கோலியாவின் பாதர்ஜாவையே மீண்டும் எதிர்கொண்டார்.

ஆனால், இறுதி சுற்றில், புதிய எழுச்சியுடன் செயல்பட்டு, 10-7 என்ற கணக்கில் அவரை சாய்த்து, இரண்டாவது முறையாக தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.