சென்னை:

இஸ்ரோ உருவாக்கிய தெற்கு ஆசிய தொலைத் தொடர்பு செயற்கைகோள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை 4.57 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி-எப் 09 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.

இந்த செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதற்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘‘ஜி சாட் 9 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. சார்க் நாடுகளின் முன்னேற்றத்திற்கு ஜிசாட் -9 செயற்கைகோள் பெரிதும் உதவும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த மண்டலத்தில் உள்ள பாகிஸ்தான் தவிர மற்ற அனைத்து சார்க் நாடுகளும் இதனால் பயனடையும். ஜி-சாட் 9 செயற்கைகோள் 2,230 கிலோ எடை கொண்டது. தகவல் தொடர்புக்கு உதவும்

‘12 கே.யு.பேண்ட்’ எந்திரங்களை சுமந்து செல்கிறது. இதனுடைய ஆயுள் காலம் 12 ஆண்டுகளாகும். இந்த செயற்கைகோள், தகவல்தொடர்பு, தெற்கு ஆசிய நாடுகளில் உள்ள மாநிலங்களுக்கு பேரிடர் பற்றி முன்கூட்டியே தகவல்களை தெரிவிக்கும். டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தகவல் திறனை அளிக்கும். மாநில நூலகங்களை இணைக்கும் திறன் கொண்டது.