சென்னை,

சிய நீச்சல் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள் 3 பேர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற 9வது ஆசிய நீச்சல் போட்டியில் உலகம் முழுவதும் இருந்து பல்வேறு வீரர்கள் கலந்துகொண்டனர்.

இந்த போட்டியில் இந்தியா சார்பாக ஏராளமான வீரர்கள் கலந்துகொண்டனர்.   தமிழகத்தைச் சேர்ந்த நீச்சல் வீரர்களும் பங்கு பெற்றனர்.

இதில்,  விகாஸ், லெனார்ட், தனுஷ் ஆகிய 3  வீரர்கள், நீச்சல் விளையாட்டில் வெற்றி பெற்று  பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.

தமிழகம் திரும்பிய நீச்சல் வீரர்கள் 3 பேரும், இன்று தலைமை செயலகம் வந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.