டெல்லி:

ஆசிய சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை சரிதா வெள்ளிப் பதக்கம் வென்றார். 58 கிலோ எடைப் பிரிவில் அவர் இந்த பதக்கத்தை வென்றுள்ளார்.

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் டெல்லியில் நடந்து வருகிறது. இதில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை சாக்ஷி மாலிக், சரிதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதில் ஆண்களுக்கான 65 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் பஜ்ரங் புனியாவும், பெண்களுக்கான 58 கிலோ எடைப்பிரிவில் சரிதாவும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தனர். இறுதிப்போட்டியில் கிர்கிஸ்தான் வீராங்கனையிடம் சரிதா தோற்றார். அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.