அசாம்,

லகத்தையே அச்சுறுத்தி வரும் கொலைகார விளையாட்டான புளுவேல் விளையாட்டை தடை செய்ய நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று மத்திய அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த விளையாட்டு குறித்து விளக்கம் அளிக்க சுப்ரீம் கோர்ட்டும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் அசாமில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்ய முயன்றபோது காப்பாற்றப்பட்டு உள்ளார். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், அசாம் மாநிலம் சிலிசாரில் ப்ளூவேல் விளையாட்டில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் இன்று அதிகாலை மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அசாம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

தற்கொலையை தூண்டும் விளையாட்டான,  புளுவேல் ஆன்லைன் விளையாட்டு காரணமாக தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டிலும் இந்த விளையாட்டு காரணமாக தற்கொலைகள் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து மாநில அரசுகள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.