கவுகாத்தி: அஸ்ஸாம் மாநில முன்னாள் முதல்வர் தருண்கோகாய்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அவர், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தி உள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அஸ்ஸாம் மாநிலத்தில் இன்று காலை நிலவரப்படி, இதவரை 94,592 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
தற்போதைய நிலையில், 19, 515 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், இதுவரை 74,814 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து உள்ளனர். தற்போதுவரை  260 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளதாகவும் மாநில சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டு உள்ளது.
இந்த நிலையில், உடல்நலப் பாதிப்பு காரணமாக நேற்றுமுன்தினம் கொரோனா சோதனை மேற் கொண்ட அஸ்ஸாம் மாநில முன்னாள் காங்கிரஸ் முதல்வர் தருண்கோகாய்க்கு தொற்று உறுதி யாகி உள்ளது. இதையடுத்து, கடந்த சில நாட்களாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.