வுகாத்தி

சாம் மாநில முன்னாள் முதல்வர் தருண் கோகாய் மரணம் அடைந்தார்.

அசாம் மாநில முன்னாள் முதல்வரான தருண் கோகாய் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.  அவர் கவுகாத்தியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அவர் கொரோனாவில் இருந்து குணமடைந்த நிலையில் மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டார்.  அவருடைய உடல் உறுப்புக்கள் ஒவ்வொன்றாகச் செயல் இழந்தன.

சுமார் 86 வயதாகும் தருண் கோகாய் சிகிச்சை பலனின்றி இன்று மாலை கவுகாத்தி மருத்துவமனையில் உயிர் இழந்தார்.  அவரது மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.