டெல்லி: அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்து உள்ளார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து 5 மாநில தேர்தல் தேதிகளை தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அசாமில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. மார்ச் 27ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும். 2ம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 1ம் தேதியும், மூன்றாம் கட்டமாக ஏப்ரல் 6ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறும்.

வாக்கு எண்ணிக்கையானது மற்ற மாநிலங்களை போன்று அசாமிலும் மே 2ம் தேதி நடைபெறும். அதற்காக மார்ச் 2ம் தேதி முதல் வேட்பு மனுத்தக்கல் செய்யலாம் என்று கூறினார்.