சென்னை: தமிழகத்தில் பல மாவட்டங்கள் இரண்டாக பிரிக்கப்பட்ட நிலையில், புதிதாக பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கான சட்டப்பேரவைத் தொகுதிகளை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட உள்ளது.

நிர்வாக வசதிக்காக தமிழகஅரசு சில மாவட்டங்களை இரண்டாக, மூன்றாக பிரித்தது. அதன்படி,  கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதி வரை 32 மாவட்டங்கள் மட்டுமே இருந்தது. தற்போது புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதால், மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை   37 மாவட்டங்களாக அதிகரித்துள்ளது.

விழுப்புரத்தை பிரித்து புதிதாக கள்ளக்குறிச்சி மாவட்டம், (2019, ஜனவரி 8ம் தேதி) தமிழகத்தின் 33வது மாவட்டமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு மாவட்டமும், வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரித்து புதியதாக திருப்பத்தூர் மாவட்டம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டமாக அறிவிக்கப்பட்டது., விழுப்புரத்தில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டமும், நெல்லையில் இருந்து தென்காசி மாவட்டமும் பிரிக்கப்பட்டது.

இநத நிலையில்,  தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கான சட்டப்பேரவைத் தொகுதிகளின் விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது

தமிழகத்தில் 2021ல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, தேர்தல் நடத்துவது தொடர்பான பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களின் கீழ் வரும் சட்டப்பேரவைத் தொகுதிகளைப் பிரித்து இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது

புதியதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற தொகுதிகள் விவரம்: 
காஞ்சிபுரம்: ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர்(தனி), உத்திரமேரூர், காஞ்சிபுரம்
செங்கல்பட்டு:  சோழிங்கநல்லூர், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர்(தனி), மதுராந்தகம்
 வேலூர்: காட்பாடி, வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம்(தனி), கீழவைத்தியனாங்குப்பம்(தனி
ராணிப்பேட்டை: அரக்கோணம்(தனி), சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு
திருப்பத்தூர்: வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர்
விழுப்புரம்: செஞ்சி, மைலம், திண்டிவனம்(தனி), வானூர்(தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர்
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி(தனி
நெல்லை:  நெல்லை, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம்
தென்காசி: சங்கரன்கோவில்(தனி), வாசுதேவநல்லூர்(தனி), கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம்.