சென்னை:
மிழக சட்டசபையில் மானிய கோரிக்கை விவாத்தின்போது, தமிழகத்தை நோக்கி தொழிற்சாலைகள் வந்துகொண்டிருக்கின்றன என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜா சட்டசபையில் மானிய கோரிக்கையில் விவாதத்தின்போது,  தமிழகத்திற்கு வரவேண்டிய தொழிற்சாலைகள் வெளி மாநிலங்களுக்கு சென்று விட்டதாக  குற்றம்சாட்டினார்.
jaya-1
அவருடைய குற்றச்சாட்டை மறுத்து பேசிய முதல்வர் ஜெயலலிதா: தமிழகத்தை விட்டு எந்த தொழில் நிறுவனமும் வெளிமாநிலங்களுக்கு இடம் பெயரவில்லை என்றார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு, தடையில்லா மின்சாரம் வழங்கப்படுவதும் முக்கிய காரணங்களாகும். கர்நாடகா, ஆந்திராவுக்கு தொழில்நிறுவனங்கள் செல்வதாக திமுக சொல்வது தவறு. இரு மாநில முதல்வர்களும் சலுகைகள் அறிவித்தும் தமிழகத்தை விட்டு தொழில் நிறுவனங்கள் செல்லவில்லை.
அவ்வாறு சென்ற தொழிற்சாலைகளின் பெயர்களை தெரிவிக்க முடியுமா? எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தமிழகத்தை விட்டு தொழிற்சாலைகள் செல்லாது. வரும் காலங்களில் முதலீட்டாளர்கள் தமிழகத்தில் தொழில்துவங்க வரிசையில் நிற்பார்கள்.  தொழில்நிறுவனங்கள் தமிழகத்தை தான் நாடி வருகின்றன. தமிழகத்தை விட்டு வேறெங்கும் செல்ல விரும்புவதில்லை என்றார்.
மேலும்,  தி.மு.க. , ஆட்சி காலத்தில்தான் தமிழகத்திற்கு வர வேண்டிய ரயில் பெட்டி ஆலை ஆந்திராவுக்கு சென்றது ஏன்? இதற்கான காரணத்தை தி.மு.க., விளக்க வேண்டும். மெட்ரோ ரயில் பெட்டிகள் தயாரிப்பு தமிழகத்தில் நடக்காமல் ஆந்திராவுக்கு சென்றது ஏன்?  என்றும் வினவினார்.
பெரும் தொழில்நிறுவனங்கள் கூட தமிழகத்தை நோக்கிதான் வந்து கொண்டிருக்கின்றன. அதிமுக ஆட்சியில் அதிகளவு அன்னிய நேரடி முதலீடு அதிகரித்துள்ளது .கடந்த 5 வருடங்களில் 85820 கோடி அன்னிய நேரடி முதலீடு அதிகரித்துள்ளது என்றார்.