சென்னை,

சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டு தண்டனை பெற்ற  முன்னாள் அமைச்சர் அரங்கநாயகத்தின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த ஐகோர்ட்டு  தண்டனையை நிறுத்தி வைத்து உத்தர விட்டுள்ளது.

 

வருமானத்திற்கு அதிகமாக சொத்துகுவித்த வழக்கில் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த ஏப்ரல் மாதம் 17ந்தேதி  ஊழல் வழக்குகளுக்கான சிறப்பு நீதி மன்றம் தீர்ப்பளித்தது.

அரங்கநாயகம் 1991- 96ம் ஆண்டின் அதிமுக ஆட்சியின் போது கல்வித்துறை அமைச்சராக இருந்தார். அப்போது அவர்  வருமானத்திற்கு மீறி  1.15 கோடி சொத்து குவித்துள்ளதாக அவர்மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் இன்று அவருக்கு 3 ஆண்டுகாலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தீர்ப்பை எதிர்த்து அரங்கநாயகம் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த வழக்கில் அவருக்கு வழங்கப்பட்ட 3 ஆண்டு தண்டனையை நிறுத்தி வைக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.