ஒரு பிரிட்டிஷ் மருந்து தயாரிப்பு நிறுவனம் அஸ்ட்ராஜெனிகா அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட சோதனைகளைத் தொடங்கும் மூன்றாவது நிறுவனமாகியுள்ளது. இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா, அதன் COVID-19 தடுப்பு மருந்து –  AZD1222 க்கு பெரிய அளவிலான, 3 ஆம் கட்ட பரிசோதனையை கடந்த திங்கள்கிழமை அறிவித்தது. ஜூலை மாதம் நடத்தப்பட்ட முதல் மற்றும் இரண்டாம் கட்ட சோதனைகளின் முடிவுகள் மற்றும் நிறுவனத்தின் அஸ்ட்ராஜெனெகாவின் அறிக்கையின்படி, சோதனைகளில் பங்கேற்ற அனைத்து நபர்களிடமும் கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பு மருந்து நிலையாக செயல்பட்டது மற்றும் நோயாளிகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மேலும், வலுவான நோயெதிர்ப்பு செயல்பாடுகளை உருவாக்கியது” என்றுமுடிவுகள் வெளியிடப்பட்டது.

“AZD1222 பங்கேற்ற அனைத்து தன்னார்வலர்களிடமும் பாதுகாப்பு மற்றும் நோயெதிர்ப்புத் தன்மையைக் காட்டியதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று நிறுவனத்தின் மூத்த நிர்வாகக் குழுவின் உறுப்பினர் மெனே பங்கலோஸ் கூறினார். “மருத்துவ பரிசோதனைகள் COVID-19 நோயிலிருந்து தடுப்பு மருந்து பாதுகாப்பதை நிரூபிக்க வேண்டும் மற்றும் பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், அதை உலகளவில் நியாயமான மற்றும் சமமான முறையில் முடிந்தவரை விரைவாக கிடைக்கச் செய்வதற்கு நாங்கள் கடுமையாக உழைப்போம்.”

கேம்பிரிட்ஜ், மாசசூசெட்ஸ் சேர்ந்த மாடர்னா மற்றும் ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனங்கள் ஏற்கனவே தங்கள் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகளின் மூன்றாவது கட்ட சோதனைகளை அமெரிக்காவில் தொடங்கியுள்ளன. அஸ்ட்ராஜெனிகா தற்போது அமெரிக்காவில் சோதனைகளைத் தொடங்கும் மூன்றாவது நிறுவனம் ஆகும். இந்நிறுவனங்கள் தங்கள் தடுப்பு மருந்துகளை உருவாக்க மில்லியன் கணக்கான நிதியை அமெரிக்க அரசிடம் ஒருந்து பெற்றுள்ளன. அதேப் போல  அஸ்ட்ராஜெனிகாவின் அமெரிக்க சோதனைகள் அமெரிக்காவின் சுகாதார மற்றும் மனித சேவைகள் துறையால் நிதியளிக்கப்படுகிறது. இம்மருந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இருந்து ஆரோக்கியமான அல்லது நிலையான மருத்துவ நிலைமைகளைக் கொண்ட முப்பதாயிரம் தன்னார்வலர்கள் இந்த சோதனைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படுகிறார்கள். இருப்பினும், மொத்தம்  இங்கிலாந்து உட்பட பல நாடுகளில் 50,000 நபர்கள், தடுப்பு மருந்துக்கான பின்கட்ட சோதனைகளில் பங்கேற்பார்கள். , பிரேசில், தென்னாப்பிரிக்கா, ஜப்பான் மற்றும் ரஷ்யாவிலும் சோதனைகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அமெரிக்க ஆய்வின் ஒரு பகுதியாக, பங்கேற்பாளர்கள் தோராயமாக இரண்டு வாரங்களுக்கு AZD1222 அல்லது ஒரு மருந்து போன்ற போலியை நான்கு வார இடைவெளியில் இரு முறை பெறுவார்கள். “மருத்துவ சோதனை சமூகத்தில் உள்ள தொற்றுநோய்களின் வீதத்தைப் பொறுத்து, இந்த ஆண்டின் பிற்பகுதியில் சோதனைகளின் முடிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன” என்று அஸ்ட்ராஜெனிகா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மருத்துவ பரிசோதனைகள் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டால், “தடுப்பு மருந்து பரவலாகவும், சமாகவும் வழங்கப்படவிருப்பதை உறுதிப்படுத்த பிரிட்டிஷ் மருந்து உற்பத்தியாளர்கள், அரசாங்கங்கள் மற்றும் பிற கூட்டாளர்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றன என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. AZD1222 தடுப்பு மருந்தின் உலகளாவிய விநியோக திறன் சுமார் 3 பில்லியன் அளவுகளில் உள்ளது என்று அஸ்ட்ராஜெனிகா தெரிவித்துள்ளது.

எந்தவொரு கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தையும்  பயன்படுத்துவதற்கு அங்கீகாரம் அளிப்பது என்பது இலகுவாக செய்யப்படாத ஒரு முடிவு என்று உலக சுகாதார அமைப்பின் உயர் அதிகாரிகள் கூறிய அதே வாரத்தில் நிறுவனத்தின் அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதன்படி, WHO தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதன் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை சுட்டிக்காட்டினார். மேலும், ஒரு தடுப்பு மருந்துக்கு உரிமம் வழங்குவது “மிகுந்த தீவிரத்தன்மையுடனும் பிரதிபலிப்புடனும் செய்யப்பட வேண்டும்” என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.  திருமதி சுவாமிநாதனின் கருத்துக்களின் அதே நாளில், அஸ்ட்ராஜெனிகா உயர் பாதுகாப்புத் தரங்களுக்கான அதன் உறுதிப்பாட்டையும் அதன் COVID-19 தடுப்பூசிக்கான பரந்த அணுகலையும் வலியுறுத்தி ஒரு அறிக்கையை வெளியிட்டது.

“அஸ்ட்ராஜெனிகாவின் முக்கிய மதிப்புகளில் சிறந்த அறிவியல் நெறிமுறைகளை பின்பற்றுதல்,  தரத்தை பேணுதல் மற்றும் மருந்தின்  பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மேம்படுத்துதல் எங்களது மருந்தை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆக்குகின்றன, ”என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. “சந்தை அங்கீகாரத்திற்கான நிறுவனத்தின் சமர்ப்பிப்புகள் உலகெங்கிலும் உள்ள கட்டுப்பாட்டாளர்களால் நிறுவப்பட்ட கடுமையான தேவைகளைப் பூர்த்தி செய்யும்.” என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.