முன்னாள் முதல்வர் மகளுக்கு சென்னையில் ’’செக்ஸ்’ தொல்லை..
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் உள்ள கேசவபுரத்தில் வசிக்கிறார், டாக்டர் ரூபியா.
ஜம்மு- காஷ்மீர் முன்னாள் முதல்-அமைச்சர் முப்தி முகமது சயீத்தின் மகள்.
கடந்த சில நாட்களாக ரூபியாவின் செல்போனுக்கு தொடர்ச்சியாக ஆபாச அழைப்புகள் வந்துள்ளன. மூன்று செல்போன்களில் இருந்து இந்த ஆபாச ‘கால்கள்’ வந்துள்ளது. அதில் ஒரு அழைப்பு வெளிநாட்டு அழைப்பு.
இந்த ‘செக்ஸ்’ தொல்லை குறித்து ரூபியா, அபிராமபுரம் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வளம் கொழிக்கும் காஷ்மீர் பிராந்தியத்தில் இருந்து முன்னாள் முதல்வரின் மகள் ஏன் சென்னையில் குடியேற வேண்டும்?
காஷ்மீரில் ரூபியாவுக்கும், அவரது கணவர் சவுகாத் ஷெரீப்புக்கும் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருந்து வந்தது.
அவர்களிடம் இருந்து தப்பிக்க, 10 ஆண்டுகளுக்கு முன்னரே காஷ்மீரில் இருந்து இடம் பெயர்ந்து சென்னையில் கணவருடன் வசித்து வருகிறார், ரூபியா.
இன்று உள்ளூர் பத்திரிகைகளில் ‘சிங்கிள் கால’ த்தில் ( பிட் நியூஸ்) செய்தியாகியுள்ள ரூபா .30 ஆண்டுகளுக்கு முன்னர் உலக செய்திகளில் இடம் பெற்றவர் என்பது பலருக்குத் தெரியாது/
ரூபியாவின் தந்தை முப்தி முகமது சயீத் 1989 ஆம் ஆண்டில் மத்திய உள்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.
அந்த ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி ரூபா, காஷ்மீர் தீவிரவாதிகளால் கடத்தி செல்லப்பட்டார்.
அவரை விடுதலை செய்ய, சில பயங்கரவாதிகளை அந்த சமயத்தில் மத்திய அரசு விடுதலை செய்ய நேரிட்டது.
அப்போது ரூபியா, தலைப்பு செய்தியாக உலக ஊடகங்களில் கொஞ்ச காலம் இடம் பெற்றார்.
-பா.பாரதி.