காஞ்சிபுரம்:

த்திவரதரை தரிசிக்க வரும் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தரிசன நேரம் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை நீட்டிப்பதாக காஞ்சிபுரம் ஆட்சியர் அறிவித்து உள்ளார்.

108 வைணவ திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்றது காஞ்சி புரம் வரதராஜ பெருமாள் கோவில். இங்குள்ள  கோவில் குளத்தில் உள்ள மண்டபத்தில் வைக்கப்பட்டிருக்கும் அத்திவரதர் 40 ஆண்டு களுக்கு ஒரு முறை தண்ணீரில் இருந்து வெளியே வந்து  பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

அதன்படி, 40 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அத்தி வரதர் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்து வருகிறார். கடந்த 1ந்தேதி முதல் பொதுமக்கள் தரிசனம் நடைபெற்று வருகிறது. இதுவரை பக்தர்கள் தரிசனத்துக்கு காலை 6 மணி முதல் இரவு 8 மணி நேரம் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை தரிசன நேரத்தை நீட்டிப்பு செய்து காஞ்சிபுரம் ஆட்சியர்  பொன்னையா  தெரிவித்து உள்ளார்.

பக்தர்கள் கூட்டம் அதிகம் இருப்பதாலும், வெளியூரில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காகவும் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்ந்து அத்திவரதரை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.