2012-ம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மனம் கொத்தி பறவை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ஆத்மியா.

கொரோனா லாக்டவுன் காலத்தில் கால் சென்டரில் பணிபுரிந்து, மக்களுக்கு சேவை செய்ததற்காக பாராட்டுகளையும் பெற்றார்.

இந்நிலையில் தற்போது ஆத்மியாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கன்னூரைச் சேர்ந்த கப்பலில் பணிபுரியும் சனூப் என்பவரை இவர் திருமணம் செய்துக் கொள்கிறார்.

இவர்களது திருமணம் ஜன 25-ம் தேதி கன்னூரில் காலை 9.59 மணி முதல் 11.33 மணிக்குள் நடைபெற இருக்கிறது. பெற்றோர்கள் நிச்சயித்த இந்த திருமணத்தின் வரவேற்பு நிகழ்ச்சி, ஜனவரி 26-ம் தேதி அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் நடக்கவுள்ளதாம்.