நெட்டிசன்:
தஞ்சை ராஜேஷ் (Thanjai Rajesh) அவர்களின் முகநூல் பதிவு:
·
த்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் எமது வேண்டுகோள் :
நாளை மறுநாள் 11/11/2016 முதல் ஏடிஎம் மையங்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்பட இருக்கிறது. அதேநேரம் குறிப்பிட்ட காலம் வரையில் ஒருநாளைய அதிக பட்ச வரம்பு ரூ.2000 எனவும் பின்னர் அது ₹4000 ஆகவும் படிப்படியாக அதிகபட்ச வரம்பு ₹10000 ஆகவும் சில மாதங்களுக்குள் நிர்ணயிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..
0
எமது கோரிக்கை என்னவென்றால்…
எடுக்கும் பணத்தின் உச்ச வரம்பினை மிகவும் குறைத்துவிட்ட படியால் ஒரு மாதத்தில் அதிக முறை ஏடிஎம் மையங்களை பயன்படுத்த வேண்டி வரும்… ஆகையால் ஏடிஎம் மைய பயன்பாட்டிற்கான அதிகபட்ச உபயோக எண்ணிக்கை ( limitations in usage of ATM centres)தளர்த்தி ஒருவர் ஒரு மாதத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் ஏடிஎம் களை பயன்படுத்திக்கொள்ளலாம், அதற்கு கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை என்று அறிவிக்க வேண்டும்…
இதனால் அதிக முறை பயன்படுத்த வேண்டி இருக்கும் நடுத்தர , ஏழை மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் தவிர்க்க முடியும் என்று நம்புகிறோம்..