புனே: சர்வதே ஏடிபி டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், இந்தியாவின் குன்னேஸ்வரன் வெற்றிபெற்றார்.

இவர் ஜெர்மன் நாட்டின் மேடனை எதிர்த்து களமிறங்கினார். இந்தப் போட்டியின் முதல் மற்றும் இரண்டாவது சுற்றுகள் டை- பிரேக்கர் வரை சென்றன.

ஆனால், தளராமல் விளையாடிய குன்னேஸ்வரன், இரண்டு செட்களையும் 7-6 மற்றும் 7-6 என்ற கணக்கில் கைப்பற்றினார் குன்னேஸ்வரன்.

மற்றொரு ஆண்கள் ஒற்றையர் போட்டியில், இந்திய வீரர் அர்ஜுன் காடே, செக் குடியரசின் வெஸேலேயிடம் 6-2, 6-4 என்ற செட்களில் தோற்றுப்போனார்.