புதுக்கோட்டை,
நெடுந்தீவு அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 8 பேரை கைது இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் ஒரு படகையும் மூழ்கடித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் நெடுந்தீவு அருகே ஆழ் கடலிடவ மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர், மீன் பிடித்துக்கொண்டிருந்த இந்திய மீனவர்களை பிடித்து சென்றனர். அவர்களின் 22 விசைப்படகுகளை கைப்பற்றி சென்றனர்.

மீனவர்களை இலங்கை  காங்கேசன் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களின் படகு ஒன்றையும் இலங்கை கடற்படையினர் மூழ்கடித்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழக மீனவர்களின் படகுமீது இலங்கை கடற்படை  மோதியதால் படகு மூழ்கியதாகவும்,  அப்போது அந்த படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்தபோது, சக மீனவர்களால் மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.