பெங்களூரு:
காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி உச்சநீதிமன்றம் கர்நாடகா அரசுக்கு உத்தரவிட்டதை எதிர்த்து, கர்நாடக மாநிலம் முழுதும் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது.
பல பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. குறிப்பாக தமிழர் வாழும் பகுதியில் பதட்டம் நிலவியது.
 
0
இந்த நிலையில் பெங்களூரு ஸ்ரீராமபுரத்தில் உள்ள சந்தோஷ் என்ற தமிழ் இளைஞர்  கன்னட நடிகர்களை தமிழக காமெடி நடிகர்களுடன் ஒப்பிட்டு கிண்டல் செய்து   பேஸ்புக் பக்கத்தில் படங்களை பதிவிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து, அவரைத் தேடிப்பிடித்த  கன்னட அமைப்பைச் சேர்ந்த வெறியர்கள், மண்டியிடும்படி செய்து மன்னிப்பு கேட்க வைத்தனர். மேலும் அவரை கடுமையாக தாக்கினர். அருகிலேயே காவல் துறையினர் இருந்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவி்ல்லை.