சென்னை:

அப்பலோ மருத்துவமனையில் 2016-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி பதிவு செய்யப்பட்ட ஆடியோ ஒன்றை டாக்டர் சிவக்குமார் இன்று தாக்கல் செய்தார். அதில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 52 விநாடிகள் கொண்ட பேச்சு இடம்பெற்றுள்ளது. இதன் விபரம்…

ஜெ: தியேட்டரில் முதல் வரிசையில் இருக்கும் ரசிகன் விசிலடிப்பதை போல எனக்கு மூச்சு திணறுகிறது. எனக்கு ரத்த அழுத்தம் எவ்வளவு இருக்கிறது?

டாக்டர் அர்ச்சனா: ரத்த அழுத்தம் 140/80- என்று உள்ளது.

ஜெ: அது எனக்கு நார்மல் தான்.

எதுல ரெக்கார்ட் பண்றிங்க

ஜெ: ஆடியோ பதிவு செய்வது சரியாக கேட்கிறதா?

சிவக்குமார் : சிறப்பாக இல்லை. வி.எல்.சி அப்ளிகேஷன் டவுன்லோட் செய்கிறேன்.

ஜெ: எடுக்க முடியவில்லை என்றால் விட்டு விடுங்கள். இதற்காக தான் நான் அப்போவே கூப்பிட்டேன். எடுக்க முடியாது என கூறிவிட்டீர்கள். ஒன்னு கெடக்க ஒன்னு செய்கிறீர்கள் .
இவ்வாறு அதில் பதிவாகியுள்ளது