சிட்னி: இந்தியா – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, முதலில் பேட்டிங் செய்து வருகிறது. 30 ஓவர்கள் முடிவில், 2 விக்கெட்டுகளை இழந்த அந்த அணி 187 ரன்களை அடித்துள்ளது.

அந்த அணியின் துவக்க வீரர்களான டேவிட் வார்னர்(83) மற்றும் கேப்டன் ஆரோன் பின்ச்(60) இருவருமே அரைசதங்கள் அடித்தனர். மொத்தம் 3 சிக்ஸர்கள் அடித்த டேவிட் வார்னர் ரன் அவுட் செய்யப்பட்டார்.

தற்போது, ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மார்னஸ் ஆடி வருகிறார்கள். ஸ்மித் அதிரடியான ஆட்டத்தை துவக்கியுள்ளார். இன்றும் அவர் நிலைத்து நிற்கும்பட்சத்தில், இந்திய அணிக்கு சிக்கல்தான்.

இந்திய அணியில், கடந்தப் போட்டியில் பந்துவீசிய அதே 5 பந்துவீச்சாளர்கள்தான் பந்துவீசி வருகிறார்கள். முகமது ஷமிக்கு மட்டும் 1 விக்கெட் கிடைத்துள்ளது.

ஆஸ்திரேலியாவை 300 ரன்களுக்குள் கட்டுப்படுத்தும் பட்சத்தில், இந்திய அணி வெல்லும் வாய்ப்புள்ளது என்கிறார்கள் விமர்சகர்கள்.