லண்டன்

ஆஸ்திரேலியாவை சேர்ந்த 4 வயது சிறுவன் தன்னை  இளவரசி டயானாவின் மறுபிறவி என தெரிவிக்கிறார்,

பிரிட்டன் இளவரசி டயானா கடந்த 1977 ஆம் வருடம் ஒரு கார் விபத்தில் மரணம் அடைந்தார். அவரது மரணம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.  இளவரசர் சார்லசின் மனைவியான டயானாவின் மகன்களான வில்லியம் மற்றும் ஹாரி ஆகிய இருவருக்கும் தற்போது திருமணமாகி குழந்தைகளும் உள்ளனர்.

பில்லி காம்ப்பெல்

ஆஸ்திரேலியாவின் பிரபல தொலைக்காட்சி பிரபலமான டேவிட் காம்ப்பெல் என்பவரின் மகன் பில்லி காம்ப்பெல் டயானா இறந்து சுமார் 18 வருடங்கள் கழித்து பிறந்தவர் ஆவார். இவருக்கு தற்போது நான்கு வயதாகிறது. இவர் தன்னை  இளவரசி டயானாவின் மறுபிறவி என கூறிக் கொள்வதாக பிரிட்டன் ஊடகங்கள் கூறி உள்ளன.

இது குறித்து டேவிட் காம்ப்பெல், “பில்லிக்கு இரண்டு வயதாக இருந்த போது அவர் டயானாவின் புகைப்படத்தை காட்டி தாம் இளவரசியாக இருந்த போது எடுத்த புகைப்படம் எனக் கூறுவார். இவ்வாறு தொடர்ந்து பல முறை தாம் டயானா என்பதைப் போல் பில்லி பேசி உள்ளார். குறிப்பாக டயானாவின் குழந்தைப் பருவம் குறித்து தகவல்கள் கூறி உள்ளார்

அத்துடன் வில்லியம் மற்றும் ஹாரியை தனது மகன்கள் எனக் கூறும் சிறுவன் பில்லி எங்கள் குடும்பத்தினருடன் பேசும் போது அவர்களை என் பையன்கள் என கூறுவது வழக்கமாகும். எல்லாவற்றையும் விட அதிசயமாக டயானாவின் சகோதரர் ஜான் என்பவர் பிறந்து சில மணிகளில் இறந்தது பற்றியும் சரியாக கூறி வருகிறார்” என  தெரிவித்துள்ளார்.