thiruvarur dmk
தி.மு.க தலைவர் கருணாநிதி திருவாரூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்தார். திருவாரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் முத்து மீனாட்சியிடம் கருணாநிதி தனது வேட்பு மனுவை அளித்தார். வேட்பு மனு தாக்கலின் போது தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு மற்றும் திருவாரூர் மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் மற்றும் முக்கிய பிரமுகர்கள், தொண்டர்கள் பலர் உடனிருந்தனர்.