தலித் குடும்பத்துக்கு பூமி பூஜையின்  முதல் பிரசாதம்

அயோத்தியில் ராமர்  கோயில் கட்டுவதற்குப் பிரதமர் மோடி,தலைமையில் நேற்று முன்தினம் பூமி பூஜை நடைபெற்றது.

பூமி பூஜைக்காகத் தயாரிக்கப்பட்ட முதல் பிரசாதம், கோயில் அருகே வசிக்கும் மகாபீர் என்ற தலித் குடும்பத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

பூஜை முடிந்ததும், கோயில் பிரசாதத்துடன் துளசிமாலையையும் எடுத்துக்கொண்டு, கோயில் அறக்கட்டளை தொண்டர்கள், மகாபீர் வீட்டுக்குச் சென்று அதனை வழங்கினர்.

அதன் பிறகே, மற்றவர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடந்த  மக்களவை தேர்தலின் போது உத்தரப்பிரதேச முதல்-அமைச்சர் யோகி ஆதித்ய நாத், ராமஜென்மபூமியில் வழிபாடு நடத்திய பின்னரே தேர்தல்  பிரச்சாரத்தை ஆரம்பித்தார்.

ராமரை வழிபட்ட கையோடு, அவர் இதே மகாபீர் வீட்டில் தான் உணவு அருந்தினார் என்பது குறிப்பிடத்தக்கது..

-பா.பாரதி.