டில்லி:

யோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை,  இன்று முதல் உச்சநீதி மன்ற அரசியல் சாசன அமர்வு தொடர்ந்து விசாரணை நடத்த உள்ளது.

சர்சைக்குரிய நிலம் தொடர்பாக உச்சநீதி மன்றம் 3 பேர் கொண்ட மத்தியஸ்தர் குழுவை அமைத்த நிலையில், அவர்களின் முயற்சி வீணான நிலையில், 6ந்தேதி முதல் (இன்று)  அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக உச்சநீதி மன்றமே தினசரி விசாரணை நடத்தும் என்று ஏற்கனவே உச்சநீதி மன்றம்  அறிவித்து உள்ளது. அதன்படி அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது.

யோத்தியில்  சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை 3 பாகங்களாக பிரிந்து அவற்றை ராம் லல்லா, நிர்மோகி அக்காரா, சன்னி வக்ஃபு வாரியம் ஆகிய அமைப்புகளுக்கு வழங்க அலகாத் உயர் நீதி மன்றம் உத்தரவிட்டது. ஆனால் இதை ஏற்க மறுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து உச்சநீதி மன்றம் 3 பேர் கொண்ட மத்தியஸ்தர் குழு அமைத்து விசாரணை நடத்தியது. மத்தியஸ்தர் குழு அளித்த அறிக்கையை அடுத்து, மத்தியஸ்தர் குழுவினரால்  நிலம் விவகாரத்தில் எந்தவொரு இறுதி தீர்வையும்  அடைய முடியவில்லை என்று தலைமை நீதிபதி தெரிவித்திருந்தார்.

இதையடுத்து,  ர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கை உச்சநீதி மன்ற அமர்வே விசாரிக்கும் என்றும்,   வரும் 6ந்தேதி முதல் தினசரி விசாரணை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.