சென்னை,

திக பொருட்செல்வில் தயாரிக்கப்பட்ட பாகுபலி-2  ரூ.1500 கோடிக்கு மேல் வசூலில் சாதனை படைத்துள்ளது.

இது இந்திய திரைப்பட வரலாற்றில் சாதனை என்று கூறப்படுகிறது.

பிரபல தெலுங்கு இயக்குநர்  ராஜமவுலி இயக்கிய படம் பாகுபலி. ஏற்கனவே பாகுபலி வெளியான நிலையில் தற்போது, அதன் அடுத்த பகுதியான பாகுபலி-2 சமீபத்தில் வெளியானது.

கடந்த மாதம் 28ந்தேதி வெளியான பாகுபலி படம் நாடு முழுவதும் 9ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகி சாதனை படைத்திருந்தது.

இந்நிலையில், இந்த படம் வசூலில் எந்த இந்திய படமும் செய்யாத சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

அதிக வசூல் ஈட்டிய படங்கள் பட்டியலில் இருந்த தங்கல், சுல்தான் ஆகிய இரண்டு இந்தி படங்களின் சாதனையை முறியடித்து உள்ளது.

பாகுபலி 2 திரைப்படம் வெளியான 21 நாட்களில் ரூ. 1502 கோடி வசூல் செய்து சாதனையை நிகழ்த்தி உள்ளது. இந்தியாவை தவிர உலக அளவில் 3 வாரங்களில் பாகுபலி-2 ரூ.252 கோடி வசூல் செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.