யக்குனர் மணிரத்னம் இயக்கும் பிரமாண்ட சரித்திர நாவலாக உருவாகிறது பொன்னியின் செல்வன். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக காத்திருக்கிறது படக் குழு. கொரோனா ஊரடங்குமுடிந்தவுடன் படப்பிடிப்பு தொடங்க திட்டமிடப்பட்டிருக்கிறது. ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்புகள் தொடங்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அதற்கான வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது.


இப்படத்தில் நடிக்க குழந்தை நட்சத்திரமாக இருந்து சிறுமியாக பருவ வயதை எட்டும் ஒரு பாத்திரத்தில் நடிக்க சாரா தேர்வாகி இருக்கிறாராம். இவர் விக்ரம் நடித்த தெய்வத் திருமகள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று தெரிகிறது.