காஞ்சிபுரம்:

சிறுமி ஹாசினி கொலை வழக்கில் வரும் 19-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கம் மாதா நகரைச் சேர்ந்த பாபு, ஸ்ரீதேவி தம்பதியின் மகள் சிறுமி ஹாசினி. இவரை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக் கொன்ற வழக்கில் தஷ்வந்த் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் ஜாமினில் வெளிவந்த அவர், பணத்துக்காக பெற்ற தாயையும் கொலை செய்துவிட்டு மும்பைக்கு தப்பினார். ஆனால், போலீசார் அவரை, மும்பை போலீசாரின் உதவியுடன்  மும்பையின் அந்தேரி பகுதியில் மறைந்திருந்த தஷ்வந்த் -ஐ போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு  செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பல கட்ட விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில், இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் விவேகானந்தன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து,   நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

இதையடுத்து,   விசாரணை முடிவடைந்துள்ள நிலையில், வழக்கின் தீர்ப்பு வரும் 19-ம் தேதி வழங்கப்படும் என செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் அறிவித்துள்ளது.