டெல்லி :

‘பேபி மப்ளர்மேன்’ கடந்த 4 நாட்களாக சமூகவலைத்தளத்தில் பரவலாக பேசப்படும் பெயர்.

ராகுல் மற்றும் மீனாக்ஷி தோமர் தம்பதியின் ஒரு வயது மகன் அவ்யான் தோமர் தான் இந்த ‘பேபி மப்ளர்மேன்’

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராகுல் தம்பதியர், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி கொண்டாட்டத்தின் போது தங்கள் மகனுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் போல் மப்ளர், மூக்கு கண்ணாடி, குல்லா சகிதம் உடை அணிவித்து, வெற்றி களிப்பில் ஈடுபட்டனர்.

குழந்தையை பார்த்த பலர் அவனை போட்டோ மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட, அது வைரலானதோடு மட்டும் அல்லாமல், குழந்தைக்கு ‘பேபி மப்ளர்மேன்’ என்று பெயரும் சூட்டிவிட்டனர்.

இப்பொழுது இந்த ‘பேபி மப்ளர்மேன்’ ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனதையும் கொள்ளையடிக்க, வரும் 16ம் தேதி நடக்க இருக்கும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க ‘பேபி மப்ளர்மேன்’க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அழைப்பு, தங்களுக்கு கிடைத்த மாபெரும் கெளரவம் என்று ராகுல் தம்பதி கூற, ஆம் ஆத்மி தொண்டர்கள் அனைவரும் உற்சாகத்தில் கொண்டாடிவருகின்றனர்.