டந்த ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் ஒற்றையன் பேட்மின்டன் போட்டியின் இறுதிப் போட்டியில், இந்தியாவை சேர்ந்த பி.வி. சிந்துவை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை பெற்றவர் இத்தாலியை சேர்ந்த கரோலின் மரின்.

இவரின் தாய், இந்திய பேட்மின்டன் வீராங்கனைகளான சாய்னா நேவால் மற்றும் பி.வி.சிந்து வுடன் செல்ஃபி எடுக்க மைதானத்தில்  காத்திருந்த சம்பவம்  தற்போது தெரிய வந்துள்ளது.

உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவில் இருந்து கலந்துகொண்ட, பி.வி.சிந்து, வெள்ளிப்பதக்க மும், சாய்னா நேவால் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

போட்டியின் இறுதி நாளன்று, ஒலிம்பிக் வீராங்கனை கரோலினின் தாய் டோனி மார்டின் இந்திய வீராங்கனைகளுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.

அப்போது அவர்களுக்கு வாழ்த்தும் கூறி உள்ளார். இந்த செல்பி புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.