சென்னை

திரைப்பட உலகில் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்தவர்கள் பாக்யராஜ் மற்றும் அவர் சிஷ்யன் பாண்டியராஜன்.   இருவரது மகன்களும் தற்போது திரையுலகில் உள்ளனர்.  பெரிய நடிகர்களின் வாரிசுகளாக இருந்தும் போதிய வாய்ப்புக்கள் இருவருக்குமே கிடைக்கவில்லை.

பண்டியராஜன் மகன் பிருத்வி நடிக்கும் ’தொட்ரா’ என்னும் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.   இதில் பாக்யராஜ், பரத் ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.   இந்தப் படம் பாக்யராஜின் உதவியாளராஜ மதுராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ளது.

விழாவில் பேசிய பாண்டிய ராஜன், “பிருத்விக்கு திரைத்துறையில் ஒரு நல்ல நிலை வரவில்லை என்பது எனக்கு கவலையாக உள்ளது.   வெற்றி உடனடியாக வராது.  அப்படி வந்தால் அதற்கு மரியாதை இருக்காது.  ஒரு நல்ல நேரம் வர வேண்டும் இந்த படத்தில் இருந்து பிருத்விக்கு நல்ல நேரம் வரும் என நம்புகிறேன்” என கண்ணீருடன் கூறினார்.

அடுத்துப் பேசிய பாக்யராஜ். “பாண்டியராஜன் தன் மகனைப் பற்றி ரொம்பவே ஃபீல் பண்ணுகிறார்.   என் சிஷ்யனே அப்படி ஃபீல் செய்தால் அவருக்கு குருவான நான் என் மகனை பற்றி எவ்வளவு ஃபீல் செய்திருப்பேன்.  சுமார் 10 வருடங்களுக்கு முன்பு வந்த காதல் என்னும் படத்தில் நடிக்க என் மகன் சாந்தனுவுக்கு வாய்ப்பு வந்தது.  ஆனால் அவர் வயது அப்போது அந்தப் படத்துக்கு பொருத்தமில்லை என்பதால் நான் மறுத்ஹ்டு விட்டேன்.  அந்த படத்தில் பரத் நடித்து அவர் புகழ் பெற்றார்” என கண்ணிருட்ன் தெரிவித்தார்.