சென்னை: மும்பை அணி நிர்ணயித்த 151 ரன்கள் இலக்கை விரட்டிவரும் ஐதராபாத் அணி, 10 ஓவர்கள் முடிவில், 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 74 ரன்களை சேர்த்துள்ளது.

அந்த அணியின் துவக்க வீரரும் கேப்டனுமாகிய டேவிட் வார்னர், 29 பந்துகளில் 26 ரன்களை எடுத்து ஆடிவருகிறார்.

சற்று அதிரடியாக ஆடி, 22 பந்துகளில் 43 ரன்களை அடித்த பேர்ஸ்டோ அவுட்டானார். அவர், 4 சிக்ஸர்களையும், 3 பவுண்டரிகளையும் அடித்தார். மணிஷ் பாண்டே 7 பந்துகளில் 2 ரன்களை மட்டுமே அடித்து அவுட்டானார்.

தற்போது, டேவிட் வார்னருடன் விராத் சிங் இணைந்துள்ளார். எட்டக்கூடிய இலக்குதான் என்றாலும், அணிகள் தடுமாறுவது வாடிக்கையாக இருக்கிறது. முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்துள்ள நிலையில், டேவிட் வார்னருக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. எனவே, இன்றையப் போட்டியை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் அவர்.