திரைப்படங்களில் தனது உயிரை பணயம் வைத்து காப்பாற்றும் இரக்க குணம் கொண்ட பாலகிருஷ்ணா, நிஜத்தில் அதீத கோபக்காரர் என்பதும் அனைவருக்கும் தெரியும்.

கூட்டத்திற்குள் சிக்கினால் இவரிடம் அடிவாங்காத ரசிகர்களே இல்லை என்ற அளவுக்கு அங்கு பிரலமாகியுள்ளார் நடிகர் பாலகிருஷ்ணா.

இந்நிலையில் ஆந்திராவில் நடைபெற்று வரும் உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாலகிருஷ்ணா, தெலுங்குதேசம் கட்சி பிரமுகர் வீட்டிற்கு சென்றார். பாலகிருஷ்ணாவை பார்த்த பரவசத்தில் ரசிகர் ஒருவர் தூரத்தில் நின்று புகைப்படம் எடுக்க முயன்றுள்ளார். இதை கவனித்த நடிகர் பாலகிருஷ்ணா, அவரது செல்போனை தட்டிவிட்டு அவரின் கன்னத்தில் பளாரென்று ஒரு அறை விட்டுள்ளார்.

அடித்த பின் தான் தெரிந்தது அடி வாங்கியவர் விருந்துக்கு அழைத்த அரசியல் பிரமுகரின் சகோதரர் என்பது.

பின்னர் அடி வாங்கிய சோமுவிற்கு, தெலுங்குதேசம் கட்சியின் சால்வையை போர்த்தி, தான் நடிகர் பாலகிருஷ்ணாவின் தீவிர ரசிகர் என்றும் அவரது கைகள் என் மீது பட்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்றும் பேசவைத்து எடிட் செய்யப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு உள்ளது.