மிழில் பாமா விஜயம், படகோட்டி, நீர்க்குமிழி, வீராதி வீரன், முகராசி உள்ளிட்ட பல படங்கள் மற்றும் தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தி ருப்பவர் ஜெயந்தி. (வயது 75)

பெங்களூரில் குடும்பத்தினருடன் வசித்து அவருக்கு திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட் டது. உடனடியாக குடும்பத்தினர் பெங்களூரு மருத்துவமனையில் சேர்த்த னர்.
நீண்ட காலமாகவே ஜெயந்தி ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். மருத்துவமனையில் ஜெயந்திக்கு கட்டாய கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது, அதில் தொற்று இல்லை என தெரிய வந்தது. தற்போது மருத்துவமனையில் அனுமதிக் கப்படிருக்கும் ஜெயந்திக்கு செயற்கை சுவாசக் கருவி மூலம் ஆக்ஸிஜன் செலுத்தப்படுகிறது. கொரோனா கட்டுப்பாடு காரணாமாக குடும்பத்தினர் யாரும் அவர் அருகில் அனுமதிக்கப்பட வில்லை. டாக்டர்கள் ஜெயந்தி உடல் நிலையை கண்காணித்து வருகின்றனர்.