லண்டன்: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்டு உள்ள தடை தவறானது என்று இங்கிலாந்து நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தடை  விதிக்கப்பட்டு உள்ளது. அதை எதிர்த்து 2018ம் ஆண்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கடிதம் அனுப்பியது. பின்னர் கடிதம் அந்நாட்டின் உள்துறை செயலாளர் சஜித் ஜாவித் எம்.பிக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
ஆனால் அந்த கடிதம்  2019ம் ஆண்டு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் புலிகள் மீதான தடைக்கு எதிராக மேல்முறையீடு செய்தது. இங்கிலாந்தில் தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பான சிறப்பு ஆணையத்தில் இந்த மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. தீர்ப்பில், விடுதலை புலிகள் மீதான இங்கிலாந்தின் அரசின் தடை தவறானது என்று கூறி உள்ளது. அதனையடுத்து, இங்கிலாந்தில் விடுதலை புலிகள் மீதான தடை நீங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.