டாக்கா:
ங்காளதேச தலைநகர் டாக்கா அருகே உள்ள அட்டை பெட்டி தொழிற்சாலையில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 26 பேர் கருகி பலியாயினர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
டாக்காவின் வடபகுதியில் உள்ள டோங்காவில்,  அட்டை பெட்டிகள் தயாரிக்கும் பேக்கேஜிங் தொழிற்சாலை உள்ளது.  வழக்கம்போல் இன்றும் உற்பத்தி தொடர்பான வேலைகள் நடந்து வந்தன.
1fire-top
அதிகாலை சுமார் 6.15 மணியளவில்  கொதிகலன் (பாய்லர்) ஒன்று திடீரென வெடித்து சிதறியது. இதையடுத்து தீ பரவியது. நான்கு மாடிகளை கொண்ட அந்த தொழிற்சாலையில் பாய்லர் சிதறல்கள் விழுந்த இடங்களில் எல்லாம் தீ மளமளவென  பரவியது.
1fire4 1fire3 1fire2 1fire1
தொழிற்சாலையில் பணியில் இருந்த தொழிலாளர்கள் பீதி யால் அலறியடித்து  வெளியே ஓடி வந்தனர்.  தொழிற்சாரை முழுவதும் தீ பரவியதால் பலர் தீயில் சிக்கி படுகாயம் அடைந்த னர். பலர்  தீயில் சிக்கி பரிதாப மாக உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் தீயில் சிக்கி தொழிற்சாலையின் உள்ளேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.  அவர்களில்  11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் ஏராளமானோர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.   தீவிர சிகிச்சை பெற்று வந்த மேலும்  5 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் உயிரிழப்பு 26 ஆக உயர்ந்துள்ளது.
இன்னும் 74 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 10 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடத்துவதற்காக காசிப்பூர் நிர்வாக கலெக்டர் ரேகனல் தலைமையில் 5 அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.