பெங்களூரு:

அதிமுக பொதுக்குழுவை கூட்டுவதற்கு பெங்களூரு உரிமையியல் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

கர்நாடக அதிமுக செயலாளர் புகழேந்தி தொடுத்த வழக்கில் பெங்களூரு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும், வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் அக்டோபர் 13ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையில், அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் இன்று இரவுக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெங்களூரு நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.