சென்னை:
தேசியமயமாக்கப்பட்ட வங்கிளில் காலியாக உள்ள இடங்களுக்கான வங்கி அதிகாரி தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
வங்கிப் பணியாளர் தேர்வாணையம் மூலம் வங்கி பணிகளுக்கு பணியாளர்கள்ள தேர்வு செய்யயப்பட்டு வந்தனர்.  தற்போது அந்த பணியை  பி.எஸ்.ஆர்.பி. எனப்படும்  ‘இன்ஸ்டிடியூட் ஆப் பாங்கிங் பெர்சனல் செலக்சன் (ஐ.பீ.பி.எஸ்.) அமைப்பு செயல்படுத்தி வருகிறது.
bank-2
ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி போன்ற 20 பொதுத்துறை வங்கிகளில் காலியாகும் கிளர்க்,  வங்க அதிகாரி மற்றும் சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்காக எழுத்து தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.  அதில் தேர்ச்சி பெற்றதும் நேர் காணல் நடைபெறும்.
இந்த ஆண்டு காலியாக உள்ள சுமார் 8,822 வங்கி அதிகாரி மற்றும் மேனேஜ்மென்ட் டிரெயினி பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் பட்டம் அல்லது இதற்கு இணையான படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கணினி இயக்கும் திறன் அவசியம். 13-8-2016 தேதியை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தகுதி சரிபார்க்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் 1.7.2016 தேதியில் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது, 2.7.1986ம் தேதிக்கு முன்னரும், 1.7.1996ஆம் தேதிக்குப் பிறகும் பிறந்திருக்கக்கூடாது. குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்புத்தளர்வு அனுமதிக்கப்படும்.
முதல் நிலை எழுத்துத் தேர்வு, முதன்மை எழுத்துத் தேர்வு மற்றும் பொது நேர்காணல் நடத்தப்பட்டு தேர்ச்சி பெறுபவர்களுக்கு மதிப்பெண் அட்டை வழங்கப்படும். இதன் மூலம் வங்கிகள் காலி பணியிடங்களை அறிவிக்கும்போது விண்ணப்பித்து பணி  ஆணை பெறலாம்.

முதல்நிலைத் தேர்வு (பிரிலிமினரி) அக்டோபர் 16, 22, 23 தேதிகளில் நடைபெறும். முதன்மைத்தேர்வு (மெயின்) நவம்பர் 20ந்தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
முழுமையான விவரம் மற்றும் ஒதுக்கீடு வாரியான பணியிடங்களை இணையதளத்தில் பார்க்கலாம்.
http://www.ibps2016.in/2016/03/ipbs-po-exam-date.html