டில்லி

ங்கி அதிகாரிகள் சிபிஐ, சிவிசி , சிஏஜி ஆகிய மூன்றைக் கண்டு பயம் கொள்ள வேண்டாம் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

வரும் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் தயாரிப்பு தொடர்பாக பல்வேறு தரப்பினருடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர் ஆலோசனைகளை நடத்தி வருகிறார். இதில் ஒரு பகுதியாக பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளின் தலைவர்கள் உடன் அவர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் சிபிஐ இயக்குநர் ரிஷி குமார் சுக்லாவும் கலந்துகொண்டார்.

அதற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் நிர்மலா சீதாராமன், ”கடந்த 2018-ம் ஆண்டைக் காட்டிலும், 2019-ம் ஆண்டில், வங்கிகளின் வாராக்கடன் அளவு, ஒரு லட்சத்து 69 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்குக் குறைந்துள்ளது.   அத்துடன் கடன் வசூல் அதிகரித்துள்ளது.  மத்திய அரசு டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை ஊக்குவிப்பதில் தீவிரமாக உள்ளது.

டிஜிடல் பணப் பரிமாற்ற முறைகளாக  ரூபே (RuPay), பீம் யுபிஐ (Bhim UPI), ஆதார் பே, டெபிட் கார்டு (DebitCard), நிப்ட் (NEFT), ஆர்டிஜிஎஸ் (RTGS) உள்ளிட்டவை  வாடிக்கையாளர்களுக்கு உள்ளது போல் வர்த்தக நிறுவனங்களுக்கான தள்ளுபடி சலுகை ஜனவரி முதல் தேதியில் இருந்து அமல்படுத்தப்படும்

சிபிஐ வங்கி முறைகேடு உள்ளிட்ட விவகாரங்களில். தாமாக முன்வந்து வழக்கு எதையும் பதிவு செய்யாது சி.பி.ஐ. சிவிசி, சிஏஜி என பொதுவாக 3 C என அழைக்கப்படும் புலனாய்வு அமைப்புகள் நடவடிக்கை எடுத்து விடுமோ என்ற அச்சத்தை வங்கி அதிகாரிகள் கைவிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில் வருகின்ற மாதங்களில், வங்கி அதிகாரிகளோடு, ஆலோசனைக் கூட்டங்களையும், பயிற்சிப் பட்டறைகளையும் சிபிஐ அமைப்பு முன்னெடுக்க உள்ளது எனவும் சிபிஐ அதிகாரிகளாலோ, அல்லது, பிற புலனாய்வு அமைப்புகளாலோ பாதிக்கப்பட்டால், வங்கி அதிகாரிகள் புகார் அளிக்க, பிரத்யேக தொலைப்பேசி எண் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.