டெல்லி: நாட்டில் வங்கிகளும், மொத்த உள்நாட்டு உற்பத்தியும் பெரும் சிக்கலில் உள்ளதாக ராகுல் காந்தி விமர்சித்து உள்ளார்.

இது குறித்து அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார். அதில் ராகுல் காந்தி கூறி இருப்பதாவது:

நாட்டில் வங்கியின் வளர்ச்சி சிக்கலில் உள்ளது. அதேபோன்று நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் சிக்கலில் தான் இருக்கிறது. வேலையின்மையும் அதிகரித்துள்ளது.

மக்களின் மன உறுதியும் நொறுங்கி போய், சமூக நீதியும் நாள்தோறும் நசுக்கப்படுகிறது. இது வளர்ச்சியா அல்லது அழிவா என்று குறிப்பிட்டுள்ளார்.